சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள மிரிஹான இல்லம் பரபரப்பாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் ஆதரித்த கட்சியான பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தினமும் கோட்டபாயவை சந்திக்க வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபயவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக சிலர் அவரை சந்திக்க வருவதாகவும், அவரை மீண்டும் தீவிர அரசியலுக்கு வருமாறு கோரிக்கை விடுக்க பலர் மிரிஹானவில் உள்ள வீட்டிற்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று மீண்டும் அரசியலுக்கு வருமாறு கோட்டாபயவுக்கு கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.