Wednesday, January 15, 2025

சூர்ய குமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஜோடி புதிய சாதனை!

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடியது. வெற்றிக்காக போராடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மில்லர் சதமும், டிகாக் அரைச்சதமும் அடித்தனர்.
ஆனார் 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஜோடி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. டோனி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் அபாரமான பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்துள்ளனர். டோனி மற்றும் கே எல் ராகுல் ஜோடி 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13.10 ரன் ரேட்டில் 100 ரன்களை எடுத்தனர்.
அதற்கு அடுத்தப்படியாக கே எல் ராகுல் – ரோகித் சர்மா ஜோடி 13.02 ரன் ரேட்டில் 100 ரன்கள் எடுத்திருந்தனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில்
விராட் கோலி – சூர்ய குமார் ஜோடி 14.57 ரன் ரேட்டில் 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தப் போட்டியில் சூர்ய குமார் யாதவ் 22 பந்தில் 61 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 சிக்சர் 5 பவுண்டரி அடங்கும். விராட் கோலி 28 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles