Tuesday, January 21, 2025

வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2022

16வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன்.சி.விஜய் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு….

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (4) இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் 16வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன்.சி.விஜய் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் மன்னார் கல்வி வவலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் யாவரும் பாராட்டி மகிழ்கின்றனர்.

இவருக்கு பயிற்சி அளித்த பயிற்றுவிப்பாளர் திரு.M.F.ரொசேன் செரூபா பீரிஸ் அவர்களையும் அதற்கு உற்சாகப்படுத்தி வழி நடாத்திய பாடசாலையின் அதிபர் T.ஆனந்தன் (SLPS-2) அவர்களையும் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக்கல்விப்பணிப்பாளர் அவர்களையும் பாராட்டி மகிழ்கின்றது.

நீண்ட காலத்தின் பின்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட போட்டிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles