Tuesday, January 21, 2025

வன்னியில் நூலகமொன்றை அமைக்க மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளர் ஸ்ரீதர் உறுதியளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்

வன்னியில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் ஒன்றை அமைப்பதற்கும், ஆயிரம் நூல்களைப் பெற்றுத் தரவும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவின் மக்கள் நீதி மைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதருக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது, யுத்தத்திற்கு பின்னரான வன்னியின் தற்போதைய நிலமைகள் மற்றும் வன்னி மக்களின் பொருளாதார, வாழ்வாதார நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்த சட்டத்தரணி எம்.ஸ்ரீதர், வன்னி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் அமைப்பதற்கும், அவ் நூலகத்திற்கு  ஆயிரம் புத்தகங்களை வழங்குவதற்கும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இதன்போது உறுதியளித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

அத்துடன், சமகால அரசியல் நிலை மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது டன், ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பிலும் இதன்போது இருவரும் கலந்துரையாடிய தாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles