கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி பூநகரி பிரதேச கடற்தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தை சேர்ந்த கடற்தொழில் சமூகங்கள், கடற்தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகள் காரணமாக சிறு மீன்பிடி கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய கடற்தொழிலை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இது குறித்து பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.