Wednesday, January 15, 2025

மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய சரத் சந்திர நாயக்க எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக இட மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வி.கலிஸ்ரன் மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசம் ஒருங்கிணைந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர் தடை செய்யப்பட்ட கடற்தொழிலுக்கு துணை போவதாகவும் ஆகவே அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு கடற்றொழில் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தி வந்த குறித்த போராட்டத்திற்கு அமைவாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles