மேற்குறித்த மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர், காணாமல் போனவர்களின் உறவினர்களும் கொண்டு வந்திருந்த போதிலும், தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
19 தினங்களாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று வரை கரைக்குத் திரும்பவில்லை என்பதுடன், அம் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தமது வாழ்க்கையை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வாழைச்சேனை மீன்பிடி துறையிலிருந்து ஆழ்கடல் இயந்திர படகில் மீன்பிடிக்கச் சென்ற தகப்பன் மகன் உட்பட நான்கு மீனவர்கள் 19 நாட்கள் ஆகியும் இதுவரை கரை திரும்பவில்லை.
இதில் வாழைச்சேனையை சேர்ந்த கே.யூ. அஸ்ஸனலி, அவரது மகன் ஏ.எம்.முஹாஜித் மற்றும் எம்.எச்.எம்.றிஸ்வி, பி.எம்.இர்ஷாத் ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் மற்றும் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.