எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கைது செய்ததோடு அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையினரின் எல்லை மீறிய செயலால் தமிழக மீனவர்கள் பல லட்சம் மதிப்பிலான வலைகள், மீன்களை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கைது செய்ததோடு அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , ஆண்டனி ஹேமா நிஷாந்தன் , இம்மானுவேல் நிக்சன் ,துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் உள்ளிட்ட இலங்கை மீனவர்கள் 5 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர்.இவர்களிடம் இருந்து ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.