Tuesday, January 21, 2025

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை  எதிர் வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை பொலிஸார் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்திய போது குறித்த மீனவர்கள் இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை  கைது செய்ததோடு அவர்கள் மீன் பிடியில் ஈடுபட்ட    படகு ஒன்றும்  பறிமுதல் செய்யப்பட்டது.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , ஆண்டனி ஹேமா நிஷாந்தன் ,இம்மானுவேல் நிக்சன் ,துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் உள்ளிட்ட இலங்கை மீனவர்கள் 5 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர்.இவர்களிடம் இருந்து ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

-இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களும் இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை 10 மணி அளவில் பொலிஸார் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  ஆஜர்பகுத்தினர்.

-இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி இலங்கை மீனவர்கள் 5 பேரையும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குறித்த 5 இலங்கை மீனவர்களும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles