Tuesday, January 21, 2025

(Photos)–எமது நிலம் எமக்கு வேண்டும்-யாழ்ப்பாணம் பாலாவி முகாம் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று  (21) வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி   பகுதியில்   உள்ள   பாலாவி முகாம் பகுதியில் இடம்பெற்றது.

 குறித்த 100 நாள் செயல் முனைவின் 82 ம் நாள் போராட்டத்தில்  பாலாவி முகாமில்    உள்ள  பெண்கள், ஆண்கள்,இளைஞர்கள்,மற்றும் சிவில்  அமைப்பு  பிரதிநிதிகள்  என  பலர்  கலந்து கொண்டனர்.

-இதன் போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ‘வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ ‘ நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசோ கேட்கவில்லை.

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ‘ ‘

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு      ஜனநாயக உரிமையாகும் ‘ ‘ 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

 பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்’ எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு  எங்கள் சுதந்திரம்,எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சைப்படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles