காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 3 சம்பவங்களில் ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் கஞ்சா செடியுடன் இரு பெண்கள் உட்பட 4 பேரை புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய போலீசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினம் மாலை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புன்னைக்குடா பகுதியில் அமைந்துள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டனர்.
இதன்போது வீடுகளில் உள்ள கிணற்று பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இரு பெண்கள் கைது செய்ததுடன் இரு கஞ்சா செடிகளை மீட்டனர்.
அதனை தொடர்ந்து ஏறாவூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை ஆயிரம் மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்து ஏறாவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு ஒருவரை கைது செய்தனர்.
(கனகராசா சரவணன்)