Wednesday, January 22, 2025

வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு – கடுமையான நடவடிக்கைக்கு  அமைச்சர்  டக்ளஸ் வலியுறுத்தல்

வடக்கில் போதைப்பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல் வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படுகின்ற சந்தேகநபர்களை, சிறைச்சாலைகளுக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றிற்கு வழங்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால், குறித்த விடயத்தை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles