வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் கள மிறக்கப்பட்டுள்ளனர். வவுனியாவுக்கு உரிய விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை , குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விசேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.
வவுனியாவில் அதிகரித்துவரும் போதைப் பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாக கட்டுப்படுத்தவே விசேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு தகவல்களை வழங்க பின்வரும் விசேட தொலைபேசி இலக்கங்களும் 0718592378, 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது