Tuesday, January 21, 2025

(PHOTOS)-மன்னார்,மடு கல்வி வலய வீரர்களுக்கான மெய்வல்லுனர் வதிவிட பயிற்சி முகாம் அடம்பனில் ஆரம்பம்.

இவ்வருடம் (2022) ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மெய்வல்லுனர் வதிவிட பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை(28) அடம்பன்  ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

குறித்த வதிவிட பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு மாலை வரையிலான மூன்று தினங்கள் இடம் பெற உள்ளது.

-குறித்த பயிற்சி முகாமில் கொழும்பு தேசிய மட்ட தரத்திலான 8 பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெளின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்று வரும் வதிவிட பயிற்சி முகாமில் மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிறின்ஸ் லெம்பேட்,மன்னார் வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.ஞானராஜ்,மடு வலய உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் பீ.லீன் லெம்பேட்,ஆகியோரின் நெறிப் படுத்தலுக்கு அமைவாக குறித்த வதிவிட பயிற்சி முகாம் இடம் பெற்று வருகிறது.

-மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி  பெற்ற 12 வயது தொடக்கம் 20 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கு குறித்த பயிற்சி முகாம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://fb.watch/grD1metU5D/

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles