-சம்பவம் தொடர்பில் அஜித் ரோஹண கண்காணிப்பில் விசேட விசாரணை.
-மனித உரிமைகள் ஆணைக்குழு தனியான விசாரணை.
மாத்தறை, மிதெல்லவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைதான 57 வயதான உப பொலிஸ் பரிசோதகருக்கு எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை, திஹகொட, மிதெல்லவல பிரதேசத்தில் நேற்று (28) மாலை 4.30 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.