Wednesday, January 15, 2025

யாழில் இடம்பெற்ற   சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! –   (PHOTOS)

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா வின் முதலாம் ஆண்டு  ஞாபகார்த்த நினைவேந்தல் நேற்று(29)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இதன்போது கௌரி சங்கரி தவராசா வின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்  நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய “கௌரி நீதியின் குரல்” புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை  உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் பாரியாராவார்.


அவர் நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பல வழக்குகளில் முன்னிலையாகி – வாதாடி சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, கடந்த மாதம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் நினைவு நூல் வெளியீட்டு விழா கொழும்பில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles