Tuesday, January 21, 2025

கரைவலை தொழிலாளி கடல் இழுத்து உயிரிழப்பு!

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செயது வரும் 23 வயதை உடைய தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

29 ஆம் திகதி காலை கருநாட்டுக்கேணி கடற்கரைப்பகுதியில் கரைவலைக்காக கடலில் இறங்கி கயிறு இழுத்த வேளை கடல் அலை இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் நேற்று (30) காலை கொக்குளாய் கடற்கரையில் காணாமல் போன மீனவரின் சடலம் கரைஒதுங்கியுள்ளது.

சடலத்தினை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதன்போது 23 வயதையுடைய மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த கடற்தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles