Wednesday, January 15, 2025

(Video,Photos)மன்னார் மாவட்டத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் ஜோண் தாசனின்  பெயர் வீதிக்கு சூட்டப்பட்டு திறந்து வைப்பு.

வீடியோ இணைப்பு:-

https://fb.watch/gwtPUxkonj/

மன்னார் மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும்,சமூக சேவையாளருமான அமரத்துவம் அடைந்த சட்டத்தரணி ‘அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண் தாசன்’  என்பவரின் பெயரில் மன்னாரில் இன்று (1) செவ்வாய்க்கிழமை காலை வீதி ஒன்றுக்கு பெயர் சூட்டப்பட்டு பெயர்ப்பலகை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

-மக்களின் கோரிக்கைக்கு அமைவாகவும்,மன்னார் நகரசபை அமர்வில் உறுப்பினர்களின்  தீர்மானத்திற்கு அமைவாக  மன்னார் மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும்,சமூக சேவையாளருமான அமரத்துவம் அடைந்த சட்டத்தரணி அமரர் அம்புரோஸ் சைமன்  ஜோண்தாசன்    என்பவரின் பெயரில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, முதலாம் குறுக்குத் தெருவிற்கு ‘அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண்   தாசன்  ‘ என பெயர் சூட்டப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

-குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் செயலாளர்,உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

-குறித்த வீதியின் பெயர் பலகையை அமரர் அம்புரோஸ் சைமன் ஜோன் தாசன் அவர்களின் புதல்வன் சிரேஷ்ட சட்டத்தரணி ஜோண்    தாசன்   துசித் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles