வவுனியா – நெளுக்குளம் பொலிஸார் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, நெளுக்குளம் சந்திப்பகுதியில் இன்று (04) காலை 9 மணி முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.அண்மைக்காலமாக வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப்பாவனை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் வீதியால் சென்ற பேருந்துகள், சொகுசு வாகனங்கள் என்பவற்றை மறித்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனை செய்தனர்.