Monday, May 19, 2025

(Photos)-யாழ்  தீவக பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 97  வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று  (5)    காலை 10.30 மணியளவில் யாழ்  தீவக பகுதிக்கு உட்பட்ட சின்னமடு,சரவனை போன்ற பகுதி மக்களின் பங்குபற்றுதலுடன்   தீவகப் பெண்கள் வலையமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 100 நாள் செயல் முனைவின் 97 ஆம் நாள் போராட்டத்தில்  மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, யாழ்  தீவக பகுதிக்கு உட்பட்ட சின்னமடு, சரவனை  போன்ற    பகுதி   பெண்கள்,  இளைஞர்கள்,மற்றும் சிவில்  அமைப்பு  பிரதிநிதிகள்  என பலர்  கலந்து  கொண்டனர்.இதன் போது   பல்வேறு வாசகங்கள்  எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ‘வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ ‘ நாங்கள் நாட்டை துண்டாட வோ’  தனியரசு கேட்கவில்லை.இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கிறோம் ‘ ‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு      ஜனநாயக உரிமையாகும் ‘ ‘ 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்’ எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சை படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles