Tuesday, May 20, 2025

புரையோடிக் கிடக்கும் தமிழ்  மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘சமஷ்டி அரசியல் தீர்வு’ வேண்டிய மக்கள்  பிரகடனம்-அனைவரும் ஒன்று கூடுமாறு பகிரங்கமாக அழைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, 

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை ச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு  அதிகார பகிர்வு கோரிய  நூறு (100) நாட்கள் செயல் முனைவின் நூறாவது நாள்   மக்கள் பிரகடனம். 8 கார்த்திகை 2022 அன்று காலை 10.30 மணிக்கு வடக்குக்கிழக்கு மாகாணங்களிலுள்ள 08  மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது என்பதை வடக்குக்கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

இவ்விடையம் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’  எனும் 100  நாட்கள் செயல் முனைவுடைய மக்கள் குரலானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின்  அனுசரணையுடன் வடக்குக்கிழக்கு மாகாணங்களிலுள்ள  08 மாவட்டங்களிலும்  சுழற்சி முறையில்    இவ்வருடம்  ஆவணி முதலாம்  திகதி முதல்  இன்று வரை நடைபெற்று வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

குறிப்பாக,1948 இற்கு பின் இலங்கையின்  ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வந்த இனவாத அடிப்படையிலான அரசியல், பொருளாதார, சமூக, இன  ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன் முறைகளின் காரணமாகவே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் மாகாண முறை மையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், திட்டமிட்ட வகையில் சிங்கள பேரினவாத சக்திகளால் 2006ல் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.
1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமான 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இற்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இந்தக் கால இடைவெளியில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர் இடப்பெயர்வு மற்றும் பல வருட கால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர்.
போரினால்  இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் மரங்கள் உட்பட முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையில் நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்று வரையில் தமிழ் சமூகம் எதிர்கொண்டு வருகிறது.
எனவே, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொண்டு வரும் அரசியல் அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவந்து, சுயகௌரவம் உள்ள  உரிமைகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கு அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வொன்று அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
அந்த அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு பிரதேசங்களில்; தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் 100 செயல்முனைவானது  ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான  உரிமைகளுடன்  கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’எனும் மக்கள் குரலின் ஊடாக  முன்வைக்கப்படும் மக்கள் பிரகடனமாகவே ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையின் அரசியல் தீர்வு’ என்பது அமைந்துள்ளது.
எனவே வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இம் மக்கள் பிரகடனத்திற்கான  ஒன்று  கூடலில் அனைவரும்  பங்கேற்று  தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒரே குரலில்  ஓங்கி  ஒலிக்குமாறு கோருகிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களிலும் கீழ் குறிப்பிடப்படும் இடங்களில்  மக்கள்  பிரகடனக் கூடல்கள் இடம்பெறும்.
 யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்கா, நல்லூர். யாழ்ப்பாணம், அம்பாறை காரைதீவு பிரதேச பூங்கா, காரைதீவு.அம்பாறை,கிளிநொச்சி இளைஞர் மட்டம் விளையாட்டு மைதானம்,பரந்தன் சந்தி, கிளிநொச்சி,மட்டக்களப்பு மட்,புனித சூசையப்பர் கல்லூரி விளையாட்டு மைதானம், தன்னாமுனை, மட்டக்களப்பு,வவுனியா நகரசபை மைதானம், திருகோணமலை திருகோணமலை முத்தவெளி வெளியரங்கு, திருகோணமலை, முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை விளையாட்டு மைதானம்,   முல்லைத்தீவு.மன்னார் பொது விளையாட்டரங்கு போன்ற இடங்களில் நூறு (100) நாட்கள் செயல் முனைவின் நூறாவது நாள்   மக்கள் பிரகடனம் இடம் பெற உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles