இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து தடை விதிக்கவும் முழுமையான விசாரணை நடத்தவும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளது.
இதனை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (07) தெரிவித்துள்ளது.பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தனுஷ்க குணதிலக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.