Friday, May 23, 2025

(Photos)மாற்று வலுவுடையோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் சரவணை யைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ், விழிப்புலனற்றோர் சங்கத்தில் வைத்து 23 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு  வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளருமான ந.விந்தன் கனகரட்ணம் தலைமையில் இன்று(8) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண விழிப்புலனற்றோர் சங்கத்தின் உப தலைவர்  சத்தியசீலராசா ரூபராசா தலைமையில் யாழ், விழிப்புலனற்றோர் சங்கத்தில் நடைபெற்றது.இவ் உதவித் திட்டத்திற்கான நிதி பங்களிப்பினை நெடுந்தீவை சேர்ந்த காலஞ்சென்ற  உருத்திராப் பிள்ளை தங்கலட்சுமி அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு,பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலி,பிரான்ஸ்-இலங்கை ஆகியவற்றின் ஆதரவாளர்களும் அபிமானிகளுமான சுவிஸ் நாட்டில் வசிக்கும் பாஸ்கரன் ஷாமினி குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles