‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் இன்று மர நடுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.குறித்த நிகழ்வு மன் /பரிகாரி கண்டல் அ.த.க பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விற்கான அனுசரணையை சுவிஸ் நாட்டில் வசிக்கும் அகிலன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. அனுசரனையாளரின் பேரன் ‘சிவாலயர் கமவிதானை நடராஜா அவர்களின் நினைவாக மேற்படி மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
குறித்த நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள், வன்னிமண் அறக்கட்டளை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், கலந்து கொண்டனர்.இதன் போது பாடசாலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.