Tuesday, May 20, 2025

(PHOTOS)மடு பிரதேச செயலக பிரிவில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடு கையளிப்பு.

மடு பிரதேச செயலக பிரிவில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு நிர்மாணிக்கப்பட்டு இன்றைய தினம் வியாழக்கிழமை(17) வைபவ ரீதியாக பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயனாளியினால் குறித்த வீடு முழுமையாக  கட்டி முடிக்க முடியாத காரணத்தினாலும்,பெண் தலைமைத்துவ குடும்பம் என்பதன் காரணத்தினாலும்  குறித்த வீட்டை மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  இராணுவத்தினரால் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீட்டிற்கு தேவையான சில தளபாட பொருட்களையும் இராணுவத்தினர் வழங்கி வைத்துள்ளனர்.
இந்த நிலையில்  இன்றைய தினம் வியாழக்கிழமை (17) காலை குறித்த வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.         

 வீடு கையளிக்கும் நிகழ்வில்   வன்னி இராணுவ கட்டளைத் தளபதி, மடு பிரதேச செயலாளர் கே.வி. நிஜாகரன் ,உதவி பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles