Tuesday, May 13, 2025

(Photos)மன்னார் றோட்டறி கழகத்தால்  மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள் கையளிப்பு

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அங்கு தேவையின் பொருட்டு கொழும்பு தெற்கு றோட்டறி கழகத்தின் நிதி உதவியுடன் மடிக்கணினி அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் மற்றும் தகவல் சேகரித்தல் செயல்பாடு, இலத்திரனியல் முறையில் தகவல் பரிமாற்ற சேவையினை இலகுபடுத்தும் நோக்கிலும் மன்னார் பொது வைத்தியசாலை முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக வியாழக்கிழமை (17.11.2022) மடிக்கணினி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.இதற்கான பிரதான நிதி அன்பளிப்பினை கொழும்பு தெற்கு றோட்டறிக்கழகம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்றைய தினம் கொழும்பு தெற்கு றோட்டறி கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறி கழக அங்கத்தவர்கள் குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தொற்றுநீக்கி திரவம் 5 பெட்டிகள் இவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles