இலங்கையிலிருந்து நேற்று (24) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் நேற்று(24) அதிகாலை 5 மணிக்கு படகு மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களில் 3பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக எ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வன்னெரிக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ரஜிந்தி கணேசமூர்த்தி, கஜானா கணேசமூர்த்தி, டயானா கணேசமூர்த்தி, சாய்சன் கணேசமூர்த்தி ஆகியோரே இவ்வாறு தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!