Monday, May 12, 2025

(PHOTOS)மன்னார் சென் செபஸ்ரியன் றோ.க.த.க பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு.

மன்னார் சென் செபஸ்ரியன் றோ.க.த.க பாடசாலையில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை(30) காலை பாடசாலையின் அதிபர் மரியான் ஜெரால்ட் டயஸ் தலைமையில் இடம்பெற்றது.நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!

இதன் போது சூரிய கட்டைக்காடு பிரதான வீதியில் இருந்து சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டு , மாலை அணிவித்து பேண்ட் இசை வாத்தியம் முழங்க ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சாதனை படைத்த மாணவர்கள்  கௌரவிக்கப்பட்டதோடு,சாதனை படைத்த மாணவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை,பெற்றோர்,ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles