Friday, May 16, 2025

(Photos)யாழ். அரியாலையில் ரயில் – வேன் விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதி மினி வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (டிச. 1) நண்பகல் 1 மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி புகையிரதம் சென்றுகொண்டிருந்த நிலையில், அரியாலை ஏ.பி. வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் வைத்து வேன் ஒன்று குறித்த புகையிரதத்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் ஆவார். நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!

——————————————————————————————————————————————————————————————————————————————————————————–

குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் சம்பவ இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவ்விடத்தில் மேலதிக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles