Wednesday, May 21, 2025

(Photos)வாழைச்சேனை மியான்குளம் பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த  முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு.

(கனகராசா சரவணன்)
நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!—————————————————————————————————————————————————————————————————————————————————
 மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கிய உயிரிழந்த நிலையில்  முதியவர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை- பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள மியான் குளம் காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்ப்பதற்கு சென்றவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று   முதியவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்டு பிரேத  பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபர் அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles