Wednesday, May 21, 2025

தனது சொந்த மகளை மது போதையில் பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி   15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு.

சொந்த மகளை மது போதையில் பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  நேற்று (15) வியாழக்கிழமை  15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தை மாதம் மாங்குளம் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவியாகிய தனது சொந்த மகளை மது போதையில் இருந்த அவரது தந்தையாரினால் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மேற்படி தண்டனைத் தீர்ப்பு வவுனியா மேல் நீதி மன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா??? இதோ சட்டக்கல்லூரியை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம்…!!!—————————————————————————————————————————————————————————————————————————————————

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகிய பாதிக்கப்பட்ட சிறுமி, தாயார் வீட்டில் இல்லாத போது மது போதையில் வந்து தன்னை பாலியல் வன்புணர்வு புரிந்ததாக தனது தந்தை மீது குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

வவுனியா நீதவானின் நேரடி உத்தரவின்பேரில் கடந்த 6 மாத காலமாக சிறுவர் இல்ல மொன்றில் குறித்த சிறுமி வசித்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி கன்னிச்சவ்வு சிதைவடைந்து உள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

சிறுமி 11 வயதுடையவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவரது பிறப்பத்தாட்சிப் பத்திரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் சாட்சியத்தை சட்ட வைத்திய அறிக்கை ஒப்புறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதி இளஞ்செழியன் எதிரியை குற்றவாளி எனக் குறிப்பிட்டு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், சிறுமிக்கு 3 லட்ச ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் 15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இழப்பீட்டுத் தொகையை வழங்க தவறும் பட்சத்தில் 9 மாத கடூழிய சிறையும், தண்டப் பணம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மகளையே பாலியல் வன்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும் என நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பின் போது தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles