
கனடாவில் இயங்கி வரும் பல்லின பத்திரிகையாளர்கள் கழகம் இன்று மாலை நடத்திய வருடாந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் விருதுகள் வழங்கும் வைபவம் ஆகியவை அடங்கிய அடக்கமான வைபவத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு சேவையாற்றியவர்கள் என்ற வகையில் யுகம் வானொலி நிறுவனத்தின் அதிபர் ‘கலை வேந்தன் கணபதி ரவீந்திரன்’ ,வர்த்தகப் பிரமுகரும் கணக்காளரும் சமூக சேவையாளருமான சாந்தகுமார் தம்பியப்பா ஆகியோருக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருதுகள் வழங்கப் பெற்றன.

அத்துடன் படைப்பிலக்கிய துறையில் 50 வருடங்களை கடந்தும் பத்திரிகைத் துறையில் முப்பது வருடங்களைக் கடந்தும் பணியாற்றுவதோடு கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவராகவும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருபவர் என்ற வகையில் ‘உதயன்’ ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

இங்கே காணப்படும் படங்களில் விருதுகளைப் பெற்று மகிழ்ந்த 3 வெற்றியாளர்களும் நண்பர்கள் மற்றும் சக ஊடகவியலாளர்கள் மற்றும் கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் தலைவர் தோமஸ் சாரஸ் மற்றும் ‘உலகத் தமிழர் பத்திரிகையின் ஆசிரியர் த கமல்வாசன் ஆகியோர் சூழ்ந்திருக்க எடுக்கப்பட்ட படங்கள் இங்கு காணப்படுகின்றன.


