மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய் மார்களின் நலனை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு பொதி மற்றும் மகப்பேற்று உபகரணங்கள் இன்று (23) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மெசிடோ நிறுவன அலுவலகத்தில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் மார்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் போசாக்கு பொதிகள், மகபேற்று உபகரணங்கள்,சுகாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் பகுதியில் இயங்கி வரும் வன்முறையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்,பெண்களை பராமரிக்கும் இல்லத்திற்கு அவசர தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்குமான சுகாதார போசாக்கு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.