Friday, May 16, 2025

மக்கள் கஸ்ட துக்கங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின்  பிறப்பு ஒரு சிறந்த வழியாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்-

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை .

இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் போது எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.விலைவாசி அதிகரித்து இருக்கும் வேளையில் எத்தனையோ பொருட்களை வாங்க முடியாத நிலையிலும் சில பொருட்களை எப்படியும் தேடிக் கொள்ள இயலாத நிலையில் சில வீடுகளில் ஒரு வேலைக்கு கூட சாப்பிட இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் நிறைவாக இருந்து அதிலிருந்து அவர்களை சூழ இருக்கும் இந்த இருள் அகற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிறக்கும் இயேசு எமக்கு உதவி புரிவார் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,,,,

சகோதர சகோதரிகளே 2022 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவின் போது  உங்கள் ஒவ்வொருவரையும் இயேசு பிறப்பதனால் எமக்கு கொண்டு வரும் அந்த ஒளியை பெற்று எங்களை சூழ இருக்க கூடிய தீமைகள் குறைபாடுகள் அனைத்தையும் அகற்றி நாங்கள் இயேசுவின்   பேரொளியில் வாழ இறைவன் உங்களுக்கு அருள்வாராக.

நாங்கள் நத்தார் தினத்தின் போது வரலாற்றிலே அவர் இவ்வுலகிற்கு வந்தார் என்பதை நினைவு கூறுவது மாத்திரமில்லாமல் ஒவ்வொரு வருடமும் அவருடைய வருகை எங்களை  இறைவனுக்கு சமீபத்தில் கொண்டு வருகிறது என்று நாங்கள் காண்கிறோம்.

கிறிஸ்து பிறப்பு இறைவனால் ஒழுங்கு படுத்தப்பட்டது . இறைவனிடம் இருக்கும்  பேரிரக்கத்தினாலும், பேரன்பினாலும் அவர் இவ்வுலகில் பிறந்து எமது பாவங்களை எல்லாம் அகற்றி எமக்கு  மீட்பு தருகின்றார்.

இந்த காலகட்டத்தில் இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் போது எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.

விலைவாசி அதிகரித்து இருக்கும் வேளையில் எத்தனையோ பொருட்களை வாங்க முடியாத நிலையிலும் சில பொருட்களை எப்படியும் தேடிக் கொள்ள இயலாத நிலையில் சில வீடுகளிலே ஒரு வேலைக்கு கூட சாப்பிட இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் நிறைவாக இருந்து அதிலிருந்து அவர்களை சூழ இருக்கும் இந்த இருள் அகற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிறக்கும் இயேசு எமக்கு உதவி புரிவார் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.

இயேசுநாதர் பிறந்தது ஒரு மாட்டு தொழுவத்தில். அவர் பிறக்கும் போது அவருக்கு பெரிய மாளிகை இருக்கவில்லை.ஒரு பெரிய வீட்டில் கூட அவர் பிறக்கவில்லை. ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழையாகத்தான் அவர் பிறந்தார்.

ஆகையால் தான் அவர் ஏழைகளுக்கும் வரியோருக்கும்    ஓரங்கட்டப்பட்ட வர்களுக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

அந்த நம்பிக்கையில் மக்கள் தங்களுடைய கஸ்ட துக்கங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின்  பிறப்பு ஒரு சிறந்த வழியாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களை தெரிவித்து உங்களை இறைவன் ஆசீர்வதிக்க மன்றாடி நிற்கின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles