மன்னார் கிறிஸ்ரின் வசந்தி வைரமுத்து வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘சிறு முயற்சி’ சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (21) மாலை 3 மணியளவில் மாந்தை வடக்கு ப.நோ.சங்க மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட V.M.C.T நிறுவனத்தின் இயக்குநர் சூ.விமலேஸ்வரன் Eng அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவில்
பிரதம விருந்தினர்களாக மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் ம.பிரதீப் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெ.க.அரவிந்தறாஜ் , சிறப்பு விருந்தினர்களாக
நாவலாசிரியர் சீமான் பத்திநாதன் பர்ணாந்து, மன்னார் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ச.றமேஸ்,மூத்த எழுத்தாளர், N.உருத்திரமூர்த்தி,மன் அல்-அஷ்ஹார் தேசிய பாடசாலை செயலாளர் அல் ஹாஜ் நளர், கௌரவ விருந்தினர்களாக கிராம சேவகர் கி.சார்ல்ஸ் டில்சான் ,மாந்தை மேற்கு கலாசார உத்தியோகத்தர் திருமதி.ரவீந்திரநாத் றஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘சிறு முயற்சி’ சிறுவர் கதை நூல் மன்னார் மாவட்ட VMCT நிறுவனத்தின் இயக்குநர் திருவாளர் சூ.விமலேஸ்வரன் Eng அவர்களின் தலைமையில் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.இதன் போது திணைக்கள அதிகாரிகள்,சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நூல் சிறுவர் கதைகளை உள்ளடக்கிய மையினால், நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் சிறுவர்கள் கையில் “சிறு முயற்சி” நூலை வழங்கி வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியரின் ஆறாவது நூலான “சிறுமுயற்சி”க்கு கவிஞர் வெற்றிச்செல்வி சந்திரகலா நூல் நயவுரை வழங்க மன்.அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவிகளான கவிஷாலி,ஹரிதரணி அபிஷால்,தமிழ்மொழி வாழ்த்திசைக்க கெ.பிறைசனா கல்வி பற்றி பேச்சுடன் ஆற்றல் நுண்கலைக்கல்லூரியின் மாணவர்களின் நடனமும் நிகழ்வுகளாக அமைய நிகழ்ச்சி தொகுப்பினை கவிஞர் கம்பிகளின்மொழி பிறேம் சிறப்பாக வழங்க நூலாசிரியரின் ஏற்புரையுடன் நூல் வெளியீடு நிறைவுபெற்றது.







