கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருவிழா திருப்பலி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
(VIDEO)
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இயேசு பிறப்பின் திருவிழா திருப்பலி நான்கு குருக்கள் இணைந்து கூட்டு திருப்பலியாக சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
வான தூதர்கள் வேடம் அணிந்த சிறுமிகள் குருக்கள் பவனியாக ஆரத்தி செய்து இயேசு பாலனை திருப்பிடத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து சுமார் 12 மணியளவில் ஓசானா கீதம் பாட பட்டு இயேசு பாலன் அலங்கரிக்கப்பட்ட பனிபடர்ந்த குடிலில் வைக்கப்பட்டார்.
குறித்த திருப்பதியில் எமது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் விலகிப் போகவும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நோய் தொற்றுகள் நீங்கவும் விசேட விதமாக வேண்டுதல் செலுத்தப்பட்டது.
குறித்த திருப்பலியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
