மன்னார் பள்ளிமுனை யைச் சேர்ந்த வசந்தகுமார் பிரகாஷ் சிவகுமார் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(10)சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் மன்னார் பள்ளிமுனை யைச் சேர்ந்த வசந்தகுமார்,விக்டோரியா தம்பதிகளின் புதல்வராவார்.
சமூக சேவையாளரான இவர் தனது ஆரம்ப கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் பயின்றார்.
விளையாட்டு மற்றும் ஏனைய பாட விதானங்களிலும் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சாதனை படைத்துள்ளார்.
மன்னார் மாவட்டம் மற்றும் தனது கிராமத்தில் ஆன்மீகம் மற்றும் சமூக சேவையிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் இவர் மன்னார் பிரதான தபாலகத்தில் அஞ்சல் உதவியாளராக கடந்த 17 வருடங்களாக மக்களுக்காக சேவையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
