Tuesday, May 20, 2025

(photos)விடத்தல் தீவு கிராமத்திற்கான உள் நுழைவு வரவேற்பு வளைவு இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட உள்ளது.

மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி, விடத்தல் தீவு கிராமத்திற்குச் செல்லும் பிரதான  நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள விடத்தல் தீவு கிராமத்திற்கான உள் நுழைவு வரவேற்பு வளைவு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(15) மாலை 2.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட உள்ளது.

விடத்தல்தீவு கிராமத்தின்  தனித்துவமான சிறப்புகளை மெருகேற்றும் வகையில் புலம்பெயர்ந்த மற்றும் புலத்திலுள்ள விடத்தல் தீவு மண்ணின் மைந்தர்களின் நிதிப்பங்களிப்பினூடாகவும்இ விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் நெறிப்படுத்தலின் ஊடாகவும் பிரமாண்ட வரவேற்பு வளைவானது அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி விழாவில் முதன்மை விருந்தினராக பொறியியலாளரும் மன்னார் தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளரான சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் கலந்து கொள்ள உள்ளார்.

வாழ்த்துச் செய்தி

பாராளுமன்ற உறுப்பினர்.

செல்வம் அடைக்கல நாதன்.

வன்னி மாவட்டம் .

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும் ஓர் அழகான கிராமம், நிலவளம், கடல் வளம்,மனித வளம் ஒருங்கே அமையப்பெற்ற ஓர் கிராமம். பல குருக்கள் துறவிகளை, கல்விமான்களை ,இம் மாவட்டத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் ஈந்தளித்த கிராமம்.

மீன் பிடியையும், வேளாண்மையையும் தமது பிரதான வாழ்வாதார தொழிலாக கொண்டு  றோமன் கத்தோலிக்கர்கள்,கிறிஸ்தவர்கள் இந்துக்கள். இஸ்லாமியர்கள் ஆகிய மதத்தவர்களையும் உள்ளடக்கிய கிராமம்.

அனைத்து மதத்தவர்களும் ஒருங்கே ஒருமித்து பல் இன மத கலாச்சாரங்களை பின்பற்றி வாழுகின்ற ஓர் குட்டிக் கிராமம் அண்மைக்கால நம்நாட்டு உள்நாட்டு போரிலே சிக்குண்டு சிதைந்து சின்னாபின்னமாகி மீளவும் புதுப்பொலிவு பெற்று நிமிர்ந்து நிற்கும் கிராமம்,

இப்படிப்பட்ட ஓர் கிராமத்திற்கு இவ்வளவு செலவில் ஓர் நுளைவாயில் வளைவு தேவைதானா என்ற கேள்வி பலருடைய எண்ணங்களில் அல்லது மனங்களில் எழலாம். இது யதார்த்தமானது நியாயமானது.

ஆனால் இந்த மண்ணின் மைந்தன் என்ற வகையில் எனக்கும் கிராமத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான அல்லது சிறப்பான நாள். எங்கள் ஒவ்வொருவருடைய தாய்க்கு மேலான தாயாக விளங்கும் விடத்தல் தாய்க்கு விழாவெடுத்து அவளை கௌரவிக்கும் நாள் இந்நாள்.

இது இன்றைய சூழ்நிலையில் பொருத்தமானதொரு நிகழ்வும் கூட

எனவே இதனை சிந்தனையில் எடுத்து இதற்கு வடிவம் கொடுத்து உருவாகிக் உழைத்த ஒவ்வொரு உள்ளங்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களையும் நன்றிகளையும் இந் நன் நாளில் தெரிவித்து நிற்கின்றேன்.


றிசாத் பதியுதீன் ( பா.உ)
தலைவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

  “வாழ்கின்ற போது சமூகத்திற்கு செய்யும் பணி மகத்துவமிக்கதாகும்”

மன்னார்  மாவட்டமானது மூவின மக்களினதும் ஒற்றுமை தளம் என்பதை நிரூபிக்கும் வகையில் அதனது செயற்பாடுகளை நோக்குகையில் புலப்படுவதாகவும்,அதற்கொரு எடுத்துக்காட்டாக தற்போது விடத்தல்தீவு நுழைவாயில் அமையப் பெற்றுள்ளதை பார்க்கின்றேன்.

இலங்கை வரலாற்றில்  யுத்தத்தினால் மிகவும் அழிவடைந்து போன மாவட்டங்களில் மன்னாரும் உள்வாங்கப்பட்டு இருந்த நிலையில்,மாவட்டத்தின் அபிவிருத்திகள் எவ்வித பேதங்களும் இன்றி கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள மைக்கு போதுமான சான்றிதழ்கள்,அரசியல் ரீதியிலும்,அபிவிருத்தி ரீதியிலும் பேசப்படக் கூடியதொன்று இருக்கின்றது.
இந்த நிலையில் எமது நாடு எதிர் நோக்கியிருக்கின்ற பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியிலும் இன ஒற்றுமையின் மூலம் பிரதேசத்தை கட்டியழுப்பும் வகையில் உள்ளுரிலும்,வெளிநாடுகளிலும் வசிக்கும் தாராளம் மனம் படைத்தவர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி நுழைவாயில் திறப்பு நிகழ்விற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன்,இதனை அமைப்பதற்கு உதவி புரிந்த  அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆதீர் கலீல்
பிரதேச சபை உறுப்பினர்
விடத்தல்தீவு வட்டாரம்
மாந்தை மேற்கு
‘தர்மத்தின் வாசலை நீ திறந்தால் பறக்கத்தின் வாசலை அவன் திறப்பான்
மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு கிராமத்தில் கிறிஸ்தவர்கள் , முஸ்லிம்கள் ,இந்துக்கள் என மூவின மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமம் கல்வி, கலை, கலாச்சாரம்,  விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்ததற்கு பல சான்றுகள் உள்ளன.
கடந்த கால யுத்தத்தினால் எமது கிராமம் பாரிய அளவிலான சேதத்திற்கு உட்பட்டிருந்தது. இவ்வாறு சிதைவடைந்த எமது கிராமத்தை  கட்டியெழுப்ப வேண்டும் என்ற நீண்ட கால திட்ட மிடலோடு நான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று என்னால் இயன்ற பல சேவைகளை செய்திருக்கின்றேன்.
இந்த வகையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாராள மனம் கொண்ட மூவின மக்களும் (உள்நாடு, வெளிநாடு)  ஒற்றுமையாக ஒன்றிணைந்து மிகப் பெறுமதி வாய்ந்த ‘ஊருக்கான நுழைவாயிலை’ கட்டிமுடித்து 15.01.2023 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த வகையில் விடத்தல்தீவு வட்டார பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு எதிர் காலங்களில் இவ்வாரான செயற்திட்டங்கள் மூலம் எமது கிராமத்தை முன்னேற்றமடைய செய்வோம் என கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles