மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி, விடத்தல் தீவு கிராமத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள விடத்தல் தீவு கிராமத்திற்கான உள் நுழைவு வரவேற்பு வளைவு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(15) மாலை 2.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட உள்ளது.
விடத்தல்தீவு கிராமத்தின் தனித்துவமான சிறப்புகளை மெருகேற்றும் வகையில் புலம்பெயர்ந்த மற்றும் புலத்திலுள்ள விடத்தல் தீவு மண்ணின் மைந்தர்களின் நிதிப்பங்களிப்பினூடாகவும்இ விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் நெறிப்படுத்தலின் ஊடாகவும் பிரமாண்ட வரவேற்பு வளைவானது அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விழாவில் முதன்மை விருந்தினராக பொறியியலாளரும் மன்னார் தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளரான சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் கலந்து கொள்ள உள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்.
வன்னி மாவட்டம் .
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும் ஓர் அழகான கிராமம், நிலவளம், கடல் வளம்,மனித வளம் ஒருங்கே அமையப்பெற்ற ஓர் கிராமம். பல குருக்கள் துறவிகளை, கல்விமான்களை ,இம் மாவட்டத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் ஈந்தளித்த கிராமம்.
மீன் பிடியையும், வேளாண்மையையும் தமது பிரதான வாழ்வாதார தொழிலாக கொண்டு றோமன் கத்தோலிக்கர்கள்,கிறிஸ்தவர்கள் இந்துக்கள். இஸ்லாமியர்கள் ஆகிய மதத்தவர்களையும் உள்ளடக்கிய கிராமம்.
அனைத்து மதத்தவர்களும் ஒருங்கே ஒருமித்து பல் இன மத கலாச்சாரங்களை பின்பற்றி வாழுகின்ற ஓர் குட்டிக் கிராமம் அண்மைக்கால நம்நாட்டு உள்நாட்டு போரிலே சிக்குண்டு சிதைந்து சின்னாபின்னமாகி மீளவும் புதுப்பொலிவு பெற்று நிமிர்ந்து நிற்கும் கிராமம்,
இப்படிப்பட்ட ஓர் கிராமத்திற்கு இவ்வளவு செலவில் ஓர் நுளைவாயில் வளைவு தேவைதானா என்ற கேள்வி பலருடைய எண்ணங்களில் அல்லது மனங்களில் எழலாம். இது யதார்த்தமானது நியாயமானது.
ஆனால் இந்த மண்ணின் மைந்தன் என்ற வகையில் எனக்கும் கிராமத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான அல்லது சிறப்பான நாள். எங்கள் ஒவ்வொருவருடைய தாய்க்கு மேலான தாயாக விளங்கும் விடத்தல் தாய்க்கு விழாவெடுத்து அவளை கௌரவிக்கும் நாள் இந்நாள்.
இது இன்றைய சூழ்நிலையில் பொருத்தமானதொரு நிகழ்வும் கூட
எனவே இதனை சிந்தனையில் எடுத்து இதற்கு வடிவம் கொடுத்து உருவாகிக் உழைத்த ஒவ்வொரு உள்ளங்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களையும் நன்றிகளையும் இந் நன் நாளில் தெரிவித்து நிற்கின்றேன்.

றிசாத் பதியுதீன் ( பா.உ)
தலைவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
“வாழ்கின்ற போது சமூகத்திற்கு செய்யும் பணி மகத்துவமிக்கதாகும்”
மன்னார் மாவட்டமானது மூவின மக்களினதும் ஒற்றுமை தளம் என்பதை நிரூபிக்கும் வகையில் அதனது செயற்பாடுகளை நோக்குகையில் புலப்படுவதாகவும்,அதற்கொரு எடுத்துக்காட்டாக தற்போது விடத்தல்தீவு நுழைவாயில் அமையப் பெற்றுள்ளதை பார்க்கின்றேன்.

பிரதேச சபை உறுப்பினர்
விடத்தல்தீவு வட்டாரம்
மாந்தை மேற்கு
