குறிப்பாக இம்முறை இலங்கை தமிழரசு கட்சி வடக்கு,கிழக்கில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லாத நிலையில் இனியும் அவர்களை நம்பி பயனில்லை என்ற காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபைகளுக்கு சுயேட்சையாக போட்டியிட இன்று திங்கட்கிழமை(16) காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய தங்களது ஊர் மக்கள் சார்பாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களமிறக்க தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த ஊர் மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இனியும்,அரசியல் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை என்ற காரணத்தினாலேயே தற்போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த குழு ஒன்று இன்றைய தினம்(திங்கட்கிழமை) சுயேட்சையாக களமிறங்குவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முசலி பிரதேச சபைக்கு போட்டியிட இன்றைய தினம்(16) மன்னார் தேர்தல் திணைக்களத்தில் சுயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.