ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை தாக்குதல் (வீடியோ)
கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி நோக்க ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் தற்போது போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவினை அறிவித்து வருகின்றனர்.
THANKS:-Ada Derana.lk