மன்னார் மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் அலுவலர் நலன்புரிச் சங்கத் தலைவரும் மாவட்டச் செயலகத்தின் கணக்காளருமான செ.செல்வகுமார் தலைமையில் 2023 ம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் உழவர்கள் கௌரவிப்பும் மாவட்டச் செயலகத்தின் விழா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 9 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பங்குபற்றி பாராட்டு சான்றிதழ் மன்னார் பிரதேச செயலாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.


இந்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.






