Tuesday, May 13, 2025

(PHOTOS)மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் விழாவும் உழவர்கள் கௌரவிப்பும்.

 மன்னார் மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் அலுவலர் நலன்புரிச் சங்கத் தலைவரும் மாவட்டச் செயலகத்தின் கணக்காளருமான  செ.செல்வகுமார்  தலைமையில்   2023 ம் ஆண்டுக்கான  பொங்கல் விழாவும்  உழவர்கள் கௌரவிப்பும்   மாவட்டச் செயலகத்தின் விழா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை  9 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல்  கலந்து கொண்டு  மன்னார் மாவட்டத்தில்  தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கௌரவத்தை வழங்கினார்.

அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பங்குபற்றி பாராட்டு சான்றிதழ்  மன்னார் பிரதேச செயலாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை  உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர்கள்  என்று பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர்   இ.நித்தியானந்தன்   தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles