ஏறாவூர் சுகாதார துறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வரும் ஆண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற நிலையில் புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டை சோதனை நடவடிக்கையின் போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து, சிறுமியுடன் உறவை ஏற்படுத்திய சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.
கர்ப்பமடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில் சம்பவ தினமான இன்று (24)காலை 9 மணியளவில் சிறுமி தனது வீட்டில் குழந்தை யை பிரசவித்துள்ளதையடுத்து பிறந்த சிசுவை சிறுமியின் வீட்டின் முன்னால் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சிறுமியையும் சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் உட்பட இருவரை கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த துடன் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
