டென்மார்க்கை தலைமையகமாக கொண்ட தமிழ் கொடி சமூகசேவை தனியார் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இலங்கையில் இயங்கிவருகிறது.
இது முழுக்க முழுக்க மக்களுக்கான சமூக சேவை நிறுவனமாக செயற்படுகிறது.
ஏற்கனவே தமிழ் கொடி நற்பணி சேவை மூலம் மக்களுக்கான உணவு, உடை, நீர், வீடு என அடிப்படை வசதிகளையும் வாழ்வாதார உதவிகளையும் வழங்கிவருகிறது.அதன் அடுத்த கட்டமாக மக்கள் முதலீட்டாளர்களை இணைத்து வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் நிறுவனங்களையும் உருவாக்க முதற்கட்ட நடவடிக்கையில் தமிழ் கொடி இறங்கியுள்ளது. இதன் அடிப்படையில் அரசியல் மாற்றத்திற்காகவும் அரசியலுக்கான வாய்ப்பிற்காகவும் ஏங்கும் இளையவர்களுக்கான வாய்ப்பினை வழங்க தமிழ் கொடி அரசியல் களத்தினையும் மக்களுக்கானதாக அறிமுகம் செய்திருக்கிறது.
இதன் முதற்கட்ட நிகழ்வாக வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைகளில் 2023 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சைக்குழு ஒன்று என்ற 52 வேட்பாளர்களுடன் சங்கு சின்னத்தில் இளையவர்களை களமிறக்கிறது தமிழ் கொடி.