மன்னாரில் ஞாயிற்றுக்கிழமை(29) காலை விசேட அதிரடிப்படையினரால் ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட போதும் மன்னார் பொலிஸார் குறித்த போதைப்பொருள் வர்த்தகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாது விடுவித்துள்ளதாக தென்பகுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
-விசேட அதிரடிப்படை க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை க்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை(29) காலை 7.30 மணியளவில் ஐஸ் ரக போதைப்பொருளை மீட்டதுடன்,குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் ஒருவரை யும் கைது செய்தனர்.
இதன் போது குறித்த காணியில் இருந்து 4 கிராம் 54 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்டுள்ளனர்.
-எனினும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த போதைப்பொருள் வர்த்தகரை சான்றுப் பொருளான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தாது விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
