Monday, May 12, 2025

ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடக குரல்-நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இரங்கல்

கிளிநொச்சியின் ஊடகப் பரப்பில் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்த அன்புத்தம்பி நிற்சிங்கம் நிபோஜனின் திடீர் மரணம் எம் எல்லோருக்கும் தீராப்பெருவலியைத் தந்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும்,மிகச் சொற்ப வயதில், தன் முனைப்பாலும், ஊடகத்துறை மீதான அதீத ஆர்வத்தாலும் அத்துறையின் ஆழ அகலங்களையெல்லாம் அறிந்த ஒருவனாக தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு தம்பி நிபோஜன், இத்தனை அகாலத்தில் எமைப்பிரிவான் என நாம் யாரும் நினைத்தேனும் பார்த்ததில்லை.

ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னர் என்னோடு தொலைபேசியில் உரையாடிய அந்தக் குரலொலி மறையும் முன்னரே அவனது உயிரும் பிரிந்திருக்கிறது.

அண்மைக்காலமாக எமைச் சார்ந்தவர்களிடையே நிகழ்ந் தேறும் ஏற்கவே முடியாத இளவயது மரணங்களின் நீட்சியில் இணைந்துகொண்ட தம்பி நிபோஜனின் ஆத்மா அமைதிபெறட்டும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles