தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்று (1) பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரை சேர்ந்த விக்ரர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவர் இன்னும் இரண்டு மாதங்களில் காலம் முடிந்து விடுதலையாக இருந்தவர்.
மற்றைய ஒருவர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அது ரத்து செய்யப்பட்ட பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட எஸ். கிருபாகரன், வி.றொபின்சன் மற்றும் செல்லையா சதீஸ்குமார் ஆகியோரே பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கிருபாகரனின் தண்டனைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
அதேவேளை, பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள செல்லையா சதீஷ் குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர் அதை மீள பெறும் வரையில் சிறையில் தடுத்து வைக்கப் படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.