மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை(4) காலை மன்னாரில் இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.இன்று சனிக்கிழமை காலை 7.50 மணி அளவில் மன்னார் பிரதான பாலத்தில் சுதந்திர தின பேரணி ஆரம்பமானது.குறித்த பேரணியில் பொலிஸார்,பாடசாலை மாணவர்கள்,திணைக்கள தலைவர்கள்,பணியாளர்கள், உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.குறித்த பேரணி மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து தமிழ் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் ஒலிக்க செய்யப்பட்டது.பின்னர் சர்வமத தலைவர்களின் ஆசி உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன் போது இலங்கையின் 75 வது சுதந்திர தினமான இன்று (4) தமது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் 2 சிரேஷ்ட பிரஜைகளின் பிறந்த தினம் கொண்டாடப் பட்டதோடு,அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.மேலும் இம்மாதம் தமது 75 வது பிறந்த நாளை கொண்டாடும் சிரேஷ்ட பிரஜைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சுதந்திர தினத்தை யொட்டி இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது,
மேலும் அரசாங்க அதிபரின் உரை இடம் பெற்றதோடு மர நடுகையும் இடம் பெற்றது.