துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பாரிய இழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்திற்கு இன்று (9) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்த பின்னர் ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுவிடம் இவ்வாறு தனது கவலைகளை வெளியிட்டார்.
உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்த அங்குள்ள மக்களின் துயரங்களில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுவிடம் மேலும் தெரிவித்தார்.