அமெரிக்காவில் உள்ள கலிபோனியா பெரு நகரை தளமாகக் கொண்டு இயங்கும் SCSDO என அழைக்கப்படும் ‘அறிவியல் மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனம்’ நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடாத்திய நிகழ்வின் போது துறைசார் ஆளுமைக்கான விருதையும் கெளரவ முடி சூட்டலையும் மன்னார் மடுமாதா சிறிய குருமட இயக்குனர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் பெற்றுக்கொண்டார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 47 துறைசார் ஆளுமைகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.பேராசிரியர் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் முதன்மை விருந்தினராக வும்,வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.