Tuesday, May 13, 2025

10 வயதுடைய சிறுவனை காணவில்லை – உதவிகோரும் குடும்பத்தினர் !

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று (24) மாலை காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன சிறுவன் இராகலை கிருஷ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது -10) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 05 மணிக்கு பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த சிறுவன் வீட்டை விட்டு செல்லும் போது நீல நிற நீட்ட டெனிம் கால்சட்டையும், நீல நிற சேட்டும் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு 052- 2265 222, மற்றும் 076 -366 6106 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளுமாறு இராகலை பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles